ஊரில் உள்ள
கடவுளையெல்லாம் வேண்டி
கண்ணீரோடு அம்மா
புத்தியோடு பிழை
கவனமாய் இரு
வழக்க வாசிப்போடு அப்பா
கவனமாய் இரு
வழக்க வாசிப்போடு அப்பா
அடிக்கடி பேசு
யாரிடமும் சண்டைபோடாதே
அக்கறையோடு தங்கை
வார்த்தைகள் தேடும் மெளனத்தின்
பிரிவு துயரோடு மனைவி
எத்தனையாவது
படிக்கும் போது வருவீங்க
ஆவல் கேள்வியோடு மகள்
இத்தனையவும் கடந்து
நகர்ந்து போகின்றேன்
அக்கரை தேசத்திற்கு
பரதேசியாய்.