என் சிற்றறிவிற்கு எட்டும் அளவில் இஸ்லாம் மதம் தரும் வாழ்க்கை நெறிகளைப்பற்றி படித்த பின்பு மாற்று மதத்திற்கான நூல் என்ற ஒரே காரணத்திற்காக தூக்கி எறிந்து விடக்கூடாது. அதில் சொல்லப்பட்டுள்ள விசயங்களை அறிவியலும், நடைமுறையும் கலந்து குழப்பமற்ற நிலையில், எந்த மதத்தவரும் வாசித்து புரிந்து கொள்ளும் வகையில் தர வேண்டும் என எண்ணியதன் விளைவே இந்நூல். “இந்து” என்கிற என் சுய மத அடையாளத்திற்குள் நின்று கொண்டு தேடியதன் வெளிப்பாடே இந்நூல்