Saturday 20 October 2012

திருமால் தரிசனம் மற்றும் தசாவதாரம்


வழிபாடுகளின் சந்தேகங்களுக்கும், முரண்பாடுகளுக்கும் தீர்வாக இருப்பது ஆன்மிகம் சார்ந்த புத்தகங்கள் மட்டுமே. ஆனால், துரதிருஷ்டவசமாக அதற்கான தீர்வுகளையும், விளக்கங்களையும் தர வேண்டிய ஆன்மிக நூல்கள் சந்தேகங்களையும், முரண்பாடுகளையும் இன்னும் அதிகமாக்கி தருபவைகளாக மாறிப் போய்விட்டன! அவைகளைக் களையும் வகையில் தகுதியானவர்களின் ஆலோசனைகளை கொண்டு தொகுக்கப்பட்ட இந்நூலில் வினாவும், விடையுமாய் கலந்து ஓடும் வரிகள் ஆன்மிகம் சார்ந்த  சந்தேகங்களை தெளிவாக்கும்.
திருமாலின் திருமேனி தத்துவத்தில் தொடங்கி அவதாரத்தில் முடியும் இத்தொகுப்பு பக்தி சார்ந்த எண்ணங்களை விசாலப்படுத்தி தரும்.