Thursday 15 August 2013

உருமாறும் வசவுகள்

பத்தாண்டாகியும்
பாலூட்ட வக்கத்தவளென
சபித்தவர்களின் வசவுகள்
மலராப் பூக்களாய்
மலர்ந்த மலர்களாய்
உவந்த வார்த்தைகளாய்
உறை நீங்கா வாழ்த்துகளாய்
வருடந்தோறும் உருமாறி
முகம் பார்க்க வந்துவிடுகிறது
எவ்வித குற்றவுணர்வுமின்றி
என் திருமண தினத்தில்.

நன்றி : பதிவுகள்