Wednesday 21 January 2015

நேர்மை

உச்சரிப்பதைப் போல இலகுவாய் இல்லை

வாழ்க்கையில் கைக்கொள்வதும்

நித்தம் கடைப்பிடிப்பதும்.

பல நேரங்களில்

முகமாய் இல்லாமல்

முகமூடியாய் மாறி விடுகிறது.

ஏதோ ஒரு நிலையில்

எல்லா நாளும்

என்னிலிருந்து நழுவி நகர்கிறது.

மீட்டெடுத்து முகமாக்க

எத்தனிக்கும் போதெல்லாம்

பிழைக்கத்தெரியாதவன் என்ற வசையே மிஞ்சுகிறது.

ஆயினும்

நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது

முகமூடியை முகமாக்குவதற்கான யுத்தம்!

நன்றி : சொல்வனம்.காம்