Monday 5 February 2018

சங்கடத்தை கடந்த கணம்

"பள்ளிக்கூடம் பாதிநாள் போகல.......ஆக்டிவா இருப்பதற்காக சேர்ந்த கராத்தே வகுப்புக்கும் போகல.....காய்ச்சலும், காயமுமாய் நகர்ந்த இவ்வருடத்து நினைவா ஒன்னுமில்லையேடா" என மகனிடம் சொல்லிக் கொண்டிருநதேன்.

பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாய் இருந்தான்.

அந்த அமைதி அவனை சங்கடப்படுத்தி விட்டோமோ என்ற உணர்வை தந்த படியே இருந்தது.

குடியரசு தினத்தன்று பள்ளியில் இருந்து திரும்பியவன் ஷீல்டை கொடுத்தான். இந்த வருசத்துக்கு இரண்டு கிடைக்க வாய்ப்பிருக்கு. இப்ப இது மட்டும் தான் டாடி..........இன்னொன்றுக்கு ரிசல்ட் டிக்ளேர் செய்யல. செய்யவும் சொல்றேன் என்றான்.


No comments:

Post a Comment